ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Monday, November 20, 2006

இளமை ஊரை சுற்றும் ஒரு நாள் ...(மௌனம் பேசியதே)

இளமை ஊரை சுற்றும் ஒரு நாள் இது தான் வாலிபத்தின் திருநாள்
கால்கள் இருக்கு அளந்து பார்க்க கைகள் இருக்கு அள்ளி சேர்க்க
யாரு இங்கே நம்மை கேட்க வாழ்க்கையை வாழ்ந்தே பார்ப்போம் வா....

நதி போலே நடப்போமே அனைகள் போட்டால் உடைப்போமே
மலர் போலே சிரிப்போமே மனதை கடலாய் விரிப்போமே

பாதைகள் ஒவ்வொன்றாக பயணம் செய் ஊரூராக உன்னுடன் என்கேயும் வானம் வரும்...
நட்பேனும் நூலை கொண்டு உறவேனும் தரையில் நின்று
நீளம் இருக்கும் வானத்தை நெஞ்சம் இருந்தால் தீண்டலாம்
மேகம் இருக்கும் இமயத்தை மனது வைத்தால் தாண்டலாம்
நான் நினைத்தபடி போகும் வாலிபம் தான் சிரித்தபடி போகும் நாள் இது
கண்ணில் கண்ணீர் ஏது....

அனுபவி யாவும் இன்று நேர்வழி நீயும் சென்று எல்லைகள் கடந்தோடும் காற்றைப் போல...
யாவர்க்கும் எல்லாம் என்று ஆக்கினான் ஒருவன் அன்று
குடைகள் நூறு தடுக்கலாம் மழையும் நின்று போகுமா
மழையைப் பார்த்து கடமையை மனித ஜாதி கற்குமா
பார் இயற்கை ஒரு பள்ளிகூடம் போல் யார் இனியதொரு பாடம் சொன்னது
நானும் நீயும் கேட்க....

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home